தூத்துக்குடி
வரும் 25 ஆம் தேதி வரை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் நடைபெற உள்ள அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தூத்துக்குடியில் ஸ்டெர்லெட் ஆலையை மூட நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. அப்போது காவல்துறையினர் துப்பாக்கி சூடு நிகழ்த்தியதில் 12 பேர் மரணம் அடைந்ததாகவும் சுமார் 60க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாகவும் தகல்வகள் வெளிவந்தன. அங்கு தொடர்ந்து அங்கு பதட்ட நிலை நீடிக்கிறது.
கலவரத்தினால் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் வரும் 25ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு ரத்து செய்யப்பட்ட தேர்வுகள் மீண்டும் எப்போது நடக்கும் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என தெரிய வந்துள்ளது.