பெரம்பலூர்:
தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கு விரைவில் இடைத் தேர்தல் வரும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறியுள்ளார்.
தமிழகத்தில் மீண்டும் பாஜக உறுப்பினர்கள் சேர்க்கை தீவிரப்படுத்தி வரும் தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் பாஜக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை கலந்துகொண்டார்.
அதையடுத்து செய்தியளார்களிடம் பேசியவர், நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக பின்னடைவை சந்தித்ததையொட்டி கட்சியை பலப்படுத்த முடிவு செய்து, புதிய உறுப்பினர்களை தீவிரமாக சேர்த்து வருவதாக தெரிவித்தார்.
மேலும்,. “நீட்” தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரும் தமிழக சட்டப் பேரவையின் தீர்மானத்தை, குடியரசு தலைவருக்கு அனுப்பிய 4 நாட்களிலேயே விலக்களிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுவிட்டது என்று கூறியவர், காலதாமதமாக தெரிவிக்கப்பட்டது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.
மேலும், தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வரும் என்று நம்பிகை தெரிவித்தவர், அத்தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற கனிமொழி வேட்புமனுவில், தனது கணவர், மகன் ஆகியோரது வருவாய், வசிப்பிடம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தகவல்களை மறைத்து இருப்பதாகவும், மேலும், தேர்தல் நடத்தை விதி மீறல் உள்ளிட்ட குற்றச்சாட்டு குறித்தும் அவர்மீது நான் வழக்கு தொடர்ந்துள்ளேன் என்று தெரிவித்தார்.
மேலும், கனிமொழி மீது, 2 ஜி வழக்கும் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. அந்த வழக்குகளின் விசாரணையின் முடிவை தொடர்ந்து, தூத்துக்குடி மக்களவை தொகுதிக்கு கண்டிப்பாக இடைத்தேர்தல் வரும்.
இவ்வாறு தமிழிசை தெரிவித்தார்.