பூந்தமல்லி,

டியூசன் படிக்க வந்த பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக  ஓவிய ஆசிரியருக்கு சரமாரியாக அடி உதை விழுந்தது. இதன் காரணமாக அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாரி.

சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகே உள்ள மதனந்தபுரத்தில் வசித்து வருபவர் ஓவிய ஆசிரியரான வில்சன். இவர் தனது வீட்டிலேயே பள்ளிக்குழந்தைகளுக்கு டியூசன் எடுத்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று மாலை அங்கு டியூசன் படிக்கு 14 வயது மாணவிக்கு வில்சன் பாலியல் தொல்லை அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறியதை தொடர்ந்து, மாணவியின் பெற்றோர் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் ஓவிய ஆசிரியர் வில்சனை அடித்து உதைத்தனர். அப்போது வில்சன் மதுபோதையில் இருந்ததாக சொல்லப்படுகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் கொடுத்த தகவலின்படி சம்பவ இடத்துக்கு வந்த மாங்காடு போலீசார் வில்சனை கைது செய்தனர்.  பின்னர் அவரை  சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.