கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஒரு சில சினிமா நட்சத்திரங்களும் தொற்றுக்குள் ளாகினர். டிவி நடிகை நவ்யா சாமி. இவர் வாணிராணி, அரண்மனைக்கிளி, போன்ற சீரியல்களிலும் தெலுங்கில் நா பேரு மீனாட்சி, ஆமே கதா பொன்ற சீரியல்களிலும் நடித்திருக்கிறார். இவருக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்டது, இதையடுத்து பரிசோதனை செய்தார். தொற்று உறுதியானது.

இது குறித்து அவர் கூறும்போது, ’தற்போது கொரோனா அறிகுறி தெரிந்ததால் பரிசோதனை செய்தேன். அதில் தொற்று இருப்பது தெரிந்தது. படப்பிடிப்பில் இருந்த எனக்கு தொற்று அகுறி எதுவும் இல்லை. இதை சர்ச்சையாக்க வேண்டாம்’ என கேட்டுக்கொள் கிறேன்’ என்றார்.