சி.பி.எஸ்.இ. தேர்வில் அதிசயம் நிகழ்த்திய இரட்டையர்கள்….

உத்தரப்பிரதேச மாநிலம் ஹித்ராஸ் என்ற பகுதியைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள், மான்யாவும் மான்சிங்கும்.

அண்மையில் முடிவுகள்  வெளியான சி.பி.எஸ்.சி.12 – ஆம் வகுப்புத் தேர்வை இந்த இரட்டை சகோதரிகள் எழுதி இருந்தார்கள்.

தேர்வில் இருவரும் பெற்ற மதிப்பெண்  சிலிர்க்க வைப்பதாக, உள்ளது.

இருவரும் சொல்லி வைத்தமாதிரி, 95.8 % மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

இன்னொரு வியப்பூட்டும் தகவலும் உண்டு.

ஐந்து பாடங்களிலும், இந்த இரட்டையர்கள் ஒரே மதிப்பெண் பெற்றிருப்பது தான்.

பத்தாம் வகுப்புத் தேர்விலும் கூட இந்த சகோதரிகள் இதே அதிசயத்தை நிகழ்த்தி இருக்க வேண்டும்.

ஒரே ஒரு மதிப்பெண்ணில் , ‘மிஸ்’.

அப்போது மான்யா 97  சதவீத மதிப்பெண்கள் வாங்கி இருக்க, மான்சிங் கூடுதலாக ஒரு ’மார்க்’ ( 98) பெற்றிருந்தார்..

அடுத்த திட்டம் என்ன?

‘’JEE  தேர்வு எழுதப்போகிறோம். ஐ.ஐ.டி.யில் சேர வேண்டும் என்பது எங்கள் கனவு’’ என்கிறார்கள், இரு அதிசய சகோதரிகளும் கோரசாக

-பா.பாரதி.