சென்னை.

ரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக கைது செய்யப்பட்ட தினகரனிடம் சென்னையில் இன்று 3வது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது.

இரட்டை இலை சின்னம் பெற ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக அ.தி.மு.க. அம்மா அணி துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கைது செய்யப்பட்டார்.

அவர்மீது டெல்லி குற்றப்பிரிவு போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு விசாரணைக்காக டி.டி.வி. தினகரன் கடந்த வாரம் சனிக்கிழமை டில்லி சென்றார். அவரிடம் தனிப்படை போலீசார்  4 நாட்கள் விசாரணை நடத்தினார்கள்.

அதைத்தொடர்ந்து கடந்த  செவ்வாய்க்கிழமை இரவு நள்ளிரவு கைது செய்யப்பட்டார். பின்னர்  புதன்கிழமை அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க டில்லி போலீசாருக்கு கோர்ட்டு அனுமதி வழங்கியது.

அதன் பேரில் டி.டி.வி. தினகரன் கடந்த வியாழக்கிழமை சென்னை அழைத்து வரப்பட்டார். இன்று அவரிடம் மூன்றாவது நாளாக விசாரணை நடந்தது.

இதற்கிடையே டி.டி.வி.தினகரனுக்கு வழங்கப்பட்டுள்ள 5 நாள் போலீஸ் காவல் திங்கட்கிழமையுடன் முடிகிறது. எனவே அவர் இன்று இரவு மீண்டும் டில்லி கொண்டு செல்லப்படுவார் என தெரிகிறது.