மதுரை,

ரட்டை இலை விவகாரம் தொடர்பாக மதுரை ஐகோர்ட்டு கிளை ஓபிஎஸ்., சசிகலா, தினகரனுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இரட்டை இலை சின்னம் தொடர்பாக ஒரு மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.

 

இந்த மனு நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் ஆகியோரைக் கொண்ட அமர்வின் முன்பு  விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘இந்திய தேர்தல் ஆணையத்திற்கு எந்தவித உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்றும், அதே வேளையில் மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு இந்திய தலைமை தேர்தல் ஆணையர், அவைத்தலைவர் மதுசூதனன், துணை முதல்வர் பன்னீர்செல்வம், சசிகலா, தினகரன் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

இது தொடர்பான விசாரணையை செப்டம்பர் 13ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.