ராய்ப்பூர்

சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூர் அரசு மருத்துவமனையில் பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு COVID, கொரோனா  என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ராய்ப்பூர் அரசு மருத்துவமனையில் மார்ச் 26ம் தேதி ப்ரீத்தி என்பவருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தனர்.  கொரோனா உலகையே மிரட்டி வரும் சூழலில் பிறந்த குழந்தைகள் என்பதால் கொரோனா, கோவிட்  என்று அக்குழந்தைகளை அழைக்கின்றனர். 

இதுகுறித்து கருத்து தெரிவித்த  குழந்தைகளின் தாய்  ப்ரீத்தி,  “மிகவும் நெருக்கடியான சூழ்நிலை யில் இந்த குழந்தைகளை பெற்றுள்ளது  மறக்கவே முடியாத தருணம். குழந்தைகள் பிறந்தவுடன் மருத்துவர்கள் அனைவரும் அவர்களை கொரோனா, கோவிட் கோவிட் என அழைத்தனர். எனவே அப்பெயரையே இருவருக்கும்  சூட்டியுள்ளோம்.  ஆனால் இது நிரந்தரப்  பெயரகள் இல்லை. வரும் காலத்தில் பெயர்களை மாற்றி விடுவோம்” என்றார். 

தற்போது இந்தியாவில் 2350 க்கு மேற்பட்டோரிடம் கொரோனாத் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் COVID-19 பெரும் அச்சுறுத்தலுக்குரிய தொற்றுநோயாக பரவவில்லை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது…