ஒட்டவா, :

னடா நாட்டில் இந்திய பெண்கள் இருவருக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.

கனடா நாட்டின் ஆன்டாரியோ மாகாணத்தில் முதல்-மந்திரியாக காத்லின் வின்னி பொறுப்பு வகிக்கிறார்.   இவர் தனது அமைச்சரவையை மாற்றி அமைத்துள்ளார். அதில்  இந்திய பெண்கள் இருவருக்கு அமைச்சர் மந்திரி பதவி அளித்துள்ளார்.

ஹரிந்தர் மால்ஹி

அவர்கள், ஹரிந்தர் மால்ஹி (வயது 38) மற்றும் இந்திரா நைதூ ஹாரீஸ் ஆகியோர் ஆவார்கள்.

இவர்களில் ஹரிந்தர் மால்ஹி, அந்த நாட்டின் முதல் சீக்கிய எம்.பி.யான குர்பாக்ஸ் சிங் மால்ஹியின் மகளாவார்.  ஹரிந்தர் மால்ஹிக்கு, பெண்கள் நலத்துறை அளிக்கப்பட்டு உள்ளது.

மற்றொருவரான இந்திரா நைதூ ஹாரீஸ்வுக்கு கல்வித்துறை அளிக்கப்பட்டுள்ளது.

அந்த மாநிலத்தில் இன்னும் 5 மாதங்களில் தேர்தல் நடக்க உள்ள நிலையில் முதல்வர்  காத்லின் தனது மந்திரிசபையை மாற்றி அமைத்து, அதில் இந்தியர்களுக்கு வாய்ப்பு அளித்து இருக்கிறார்.

கனடாவில் சுமார் 12 லட்சம் இந்தியர்கள் வசிக்கிறார்கள் குறிப்பிடத்தக்கது.