ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள போஷனா பகுதியில், தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த பகுதியில் அவர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதில் காவல்துறையினரும் இணைந்து செயல்பட்டனர். தேடுதல் வேட்டையின் போது, துப்பாக்கிச் சூடு நடத்திய தீவிரவாதிகள் இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களுடன் இருந்த தீவிரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தீவிரவாதிகளின் நடமாட்டத்தை அடுத்து, எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.