கோவையை சேர்ந்த முருகானந்தம் பெண்களுக்கான சானிடரி நாப்கீன்களை குறைந்த செலவில் தயாரித்து வழங்கி வருகிறார்.

ஒருபுறம் பன்னாட்டு (MNC ) நிறுவனங்கள் கவர்ச்சியாக விளம்பரம் செய்து நாப்கின் வியாபாரத்தில் கோடி கோடியாய் குவிக்கிறது . இன்னொரு புறம் இந்தியாவில் இன்னும் 60 சதவீத ஏழைப் பெண்கள் நாப்கின் வாங்க வசதியின்றி பழைய துணிகளை உபயோகிக்கும் அவலம் நிலவுகிறது.

இந்த நிலையை போக்க நினைத்த முருகானந்தம் பல ஆண்டுகள் ஆராய்ச்சியின் முடிவில் குறைந்த செலவில் சுகாதாரமான நாப்கின் தயாரிக்கும் இயந்திரத்தி வடிவமைத்தார்.அவர் தயாரித்த இயந்திரம் ,  நாப்கின் போன்ற வற்றை முறைப்படி காப்புரிமை செய்தாலும் யாருக்கும் விற்கவில்லை.

மகளிர் அமைப்புகள் , பள்ளிகள் போன்றவற்றிற்கு லாபமின்றி இயந்திரம் , மூலப்பொருட்கள் வழங்கி பயிற்சி அளிக்கிறார் . இன்று 21 நாடுகளில் சுமார் 10000 இயந்திரங்கள் மூலம் , ஒரு கோடி பெண்கள் இவரின் சுகாதார மான நாப்கின்களை குறைந்த விலையில் ( 1 பீஸ் 1rs, 2rs ) உபயோகிக்கிறார்கள்.

ஏற்கனவே உலகின் சக்தி வாய்ந்த 100 நபர்களில் ஒருவராக இவரை டைம் பத்திரிக்கை (2014 ) தேர்ந்தெடுத்தது.  அதோடு, இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது கொடுத்து கவுரவித்துள்ளது.

இவரது உண்மைக் கதைதான் பேட்மேன் என்கிற படமாக வெளி வர இருக்கிறது. இந்தப் பட பிரமோசனுக்குத்தான் கையில் நாப்கினுடன் இந்தி பிரபலங்கள் போஸ்கொடுக்க.. தமிழ்ப் பிரபலங்களும் அதில் பங்கேற்க.. தற்போது முகநூல் போன்ற சமூகவலைதளங்களில் ஆளாளுக்கு நாப்கினுடன் நின்று போஸ் கொடுக்கிறார்கள்.

இது நல்ல விசயம்தான். நாப்கின் அவசியம் குறித்தும் மாதவிடாய் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமே.

ஆனால், இப்படி நாப்பினை மட்டும் வைத்து போஸ்கொடுப்பது.. ஏற்கெனவே இத்துறையில் கோலோச்சும் பிரபல பன்னாட்டு கம்பெனிகளுக்கே லாபமாக அமையும். அவர்களது  பிராண்ட்தான் விற்கும்.

ஆகவே நாப்கினோடு போஸ்கொடுக்கும் அதே நேரம் முருகானந்தம் பற்றியும் அவர் தயாரித்தளிக்கும் நாப்கின் பற்றியும் பதிவிடுங்கள்.

இன்னொன்று.

நாப்கின் பயன்படுத்துவது அவசியம். அதை கேலி கிண்டலாக பார்க்க வேண்டியதில்லை என்பதெல்லாம் சரிதான்.

அதோடு, நாப்கினை பயன்படுத்திவிட்டு வீட்டுக் கழிவறையிலோ, சாக்கடையிலோ வீச வேண்டாம் என்பதையும், முறையாக குப்பைத்தொட்டியில் வீச வேண்டும் என்பதையும் பிரச்சாரம் செய்ய வேண்டியது அவசியம்.