’ராஸ்கல்! வாயை மூடு.’’ பெண்ணிடம் பாய்ந்த  பா.ஜ.க.அமைச்சர்..

கர்நாடக மாநில பா.ஜ.க. அரசில் நீர்ப்பாசனத் துறை அமைச்சராக இருப்பவர், மதுசாமி.

கோலார் மாவட்டத்தில் நீர்ப்பாசன திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள அவர் சென்றிருந்தார்.

அப்போது கர்நாடக ரைதா சங்கத்தைச் சேர்ந்த ஒரு பெண், ‘’இந்த ஊர் ஏரியில் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அதனைத் தடுக்க நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று அமைச்சர் மதுசாமியிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

ஆத்திரம் அடைந்த மதுசாமி’’ ஆயே! வாயை மூடு ராஸ்கல்’’ என்று அந்த பெண்ணை திட்டியுள்ளார்.

பெண்ணின் முறையீடும், அமைச்சர் மதுசாமி பெண்ணிடம் சீறும் காட்சியும் வீடியோ ரூபத்தில் சமூக வலைத்தளங்களில் வரலாகப் பரவ-

அமைச்சர் மிரண்டு போனார்.

‘ நான் அந்த மாதிரி பேசி இருக்கக் கூடாது. தப்பு தான் . மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’’ என்று மதுசாமி வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஆனால் அவரை மன்னிக்க எதிர்க்கட்சிகள் தயாராக இல்லை.

‘’பெண்ணை அவதூறாகப் பேசிய மதுசாமியை அமைச்சர் பதவியில் இருந்து ’’டிஸ்மிஸ்’’ செய்ய வேண்டும்’’ என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சித்த ராமையா உள்ளிட்டோர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

– ஏழுமலை வெங்கடேசன்