கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் திரைத்துறையைப் பொறுத்தவரையில் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனால் ஃபெப்சி தொழிலாளர்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.

திரைப்படத் தொழிலாளர்களின் நிலை குறித்து, அவர்களுக்கு உதவ நடிகர் – நடிகைகள் என அனைவரும் முன்வர வேண்டும் என்று பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிக்கை வெளியிட்டிருந்தார் .

இந்த அறிக்கை வெளியானவுடனே முதல் நபராக சிவகுமார், சூர்யா மற்றும் கார்த்தி இணைந்து 10 லட்ச ரூபாய் பெப்சி தொழிலாளர்களுக்கு வழங்கினார் .

அவர்களைத் தொடர்ந்து பார்த்திபன் 250 மூட்டை அரசி வழங்கியுள்ளார். ஒவ்வொன்றுமே 25 கிலோ எடை கொண்டதாகும். நடிகர் மற்றும் இயக்குநர் மனோ பாலா 10 மூட்டை அரிசி வழங்கியுள்ளார். அனைத்துமே 25 கிலோ எடை கொண்டதாகும்.

இவர்களைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் ஃபெப்சிஅமைப்புக்கு 10 லட்ச ரூபாய் வழங்கியுள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதியும் தன் பங்கிற்கு 10 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.

இவர்களைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் பெப்சி தொழிலாளர்களுக்காக 50 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.

நடிகர் தனுஷ் 15 லட்சம் ருபாய் சினிமா தொழிலாளர்களுக்காக வழங்கியுள்ளது. மேலும் நடிகர் கமல் 10 லட்சம் ரூபாயும், இயக்குனர் ஷங்கர் 10 லட்சம் ரூபாயையும் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது நடிகரும் தயாரிப்பாளருமான திரு.உதயநிதி ஸ்டாலின் 10 லட்சம் ரூபாய் உதவி தொகையை கொடுத்துள்ளனர்.