சென்னை: திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று நேர்காணலில் பங்கேற்றார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு விநியோகம், பிப்ரவரி 17ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது. பின்னர் பிப்ரவரி 28ம் தேதி விருப்ப மனு தாக்கல் நிறைவடைந்தது.

விருப்ப மனு தாக்கல் செய்தவர்களுக்கான நேர்காணல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் மார்ச் 2ம் தேதி தொடங்கியது. இன்று வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந் நிலையில். கடைசி நாளான இன்று திமுக தலைவர் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேர்காணலில் பங்கேற்றார்.

அவரை கட்சியின் தலைவர் முக ஸ்டாலின், பொது செயலாளர் துரைமுருகன் உள்ளிட்ட குழுவினர் நேர்காணல் செய்தனர். உதயநிதி சேப்பாக்கம், திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார். முன்னதாக, வரும் 10ம் தேதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று ஸ்டாலின் அறிவித்திருந்தது, குறிப்பிடத்தக்கது.