டுப்பி

ர்நாடக மாநிலம் உடுப்பி பெஜாவர் மாடதிபதி சுவாமி விஸ்வேசா தீர்த்தர் இன்று மரணம் அடைந்தார்.

HH Sri Vishvesha Tirtha Swamiji of Pejawar Mutt calls on the Prime Minister, Shri Narendra Modi, in New Delhi on July 22, 2014.

புகழ்பெற்ற உடுப்பி பெஜாவர் மடம் கர்நாடக மாநிலத்தில் உள்ளது.  இந்த மடத்தின் ஜீயர் சுவாமி விஸ்வேசா தீர்த்தர் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால்  பாதிக்கப்பட்டிருந்தார்.  சுமார் 88 வயதான இவருக்கு நேற்று இரவு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

அவரை உடுப்பியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.   இன்று காலை 9.30க்கு சிகிச்சை பலனின்றி சுவாமி விஸ்வேச தீர்த்தர் மரணம் அடைந்தார்.  இந்த செய்தியை உடுப்பி பெஜாவர் மடம் அறிவித்துள்ளது.

இதனால் கர்நாடக மாநில பக்தர்கள் கடும் துயரம் அடைந்துள்ளன.  அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, கர்நாடக முதல்வர் எடியூரப்பா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.