லண்டன்:

சமூக வலைத்தளமான ‘பேஸ்புக்’ எனப்படும் முகநூலின் அதிபர் மார்க்குக்கு இங்கிலாந்து எம்.பிக்கள் நெருக்கடி கொடுத்துள்ளனர்.

முகநூல் பயன்படுத்தும் சுமார் 5 கோடி பேரைப் பற்றிய விவரங்கள் ஒரு ‘ஆப்’ மூலம் திருடப்பட்டு, கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்ற அரசியல் பிரசார நிறுவனத்திடம் பகிர்ந்து கொள்ளப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. அந்த விவரங்கள் அரசியல் பிரசாரத்துக்கு பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து விசாரணை நடத்த இங்கிலாந்து எம்.பி. டாமியன் கொலின்ஸ் என்பவர் தலைமையில் எம்.பி.க்கள் குழு அமைக்கப்பட்டு இருக்கிறது.  இந்த குழு, முகநூல் அதிபர் மார்க் ஜூக்கர்பெர்க், 26–ந் தேதிக்குள் தங்கள் முன்பு நேரில் ஆஜராகி, இவ்விவகாரம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று நேற்று உத்தரவிட்டது.

இதனால் முகநூல் அதிபர் மார்க், நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறார்.