நெல்லை:
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே  இன்று காலை ஒருவரை மர்ம கும்பல் வெட்டிக் கொன்றது.
சென்னையைச் சேர்ந்த கலியான் (எ) ராமச்சந்திரன், நெல்லை மாவட்டம் சங்கரன் கோயில் அருகே உள்ல அச்சம்பட்டி விலக்கு பகுதிக்கு வந்திருந்தார். இன்று காலை  இருசக்கர வாகனத்தில் அவர் சென்றுகொண்டிருந்தபோது, கார் ஒன்றில் வந்த மர்ம கும்பல் அவரை சரமாரியாக வெட்டியது.  தலையில் ஆழமாக வெட்டுபட்ட கலியான், அதே இடத்தில் துடிதுடித்து மரணடைந்தார்.
Untitled-1
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், கலியான் உடலை, உடற்கூறு ஆய்வுக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரணையை துவங்கியுள்ள போலீசார், “கொலைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. விசாரணை தொடர்கிறது” என்று தெரிவித்தனர்.
பட்டப்பகலில் நடு ரோட்டில் நடந்த இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.