டெல்லி:

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர், ஜனவரி 31ம் தேதி தொடங்குகிறது. அன்று, இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார்.

நாடாளுமன்றத்தின் 2020ம் ஆண்டின் முதல் கூட்டத் தொடர் வரும் 31ம் தேதி தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்று கிறார். அதையடுத்து  இந்த ஆண்டுக்கான பொருளாதா ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த நாளான பிப்ரவரி 1ந்தேதி 2020-2021ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். பின்னர் பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெறும்.

இந்த பட்ஜெட்  கூட்டத்தொடர்  பிப்ரவரி 11ம் தேதி வரை நடைபெறும் என்றும், பட்ஜெட் கூட்டத் தொடரின் 2 வது பகுதி மார்ச் 2ம் தேதி மீண்டும் தொடங்கி, ஏப்ரல் 3ம் தேதி வரை கூட்டத் தொடர் நடைபெறும்  முடிவு செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.