டில்லி:

த்திய பட்ஜெட் தயாரிப்பு பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் சம்பிரதாய முறைப்படி முதன்முறையாக அல்வா கிண்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

பொதுவாக மத்திய நிதி பட்ஜெட் பிப்ரவரி மாதங்களில் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். இந்த ஆண்டு லோக்சபா தேர்தல் காரணமாக இடைக்கால பட்ஜெட் தாக்கயப்பட்ட நிலையில், முழுமையான பட்ஜெட் ஜூலை 5ந்தேதி தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், பட்ஜெட் தாக்கலுக்கு 11 நாள் முன்னதாக மத்திய அரசு செயலகம் வடக்கு பிளாக்கில் உள்ள நிதி அமைச்சகத்தில் அல்வா கிண்டப்படுவது வழக்கம்.

அதன்படி,  மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் அல்வா கிண்டி மத்திய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) அச்சடிக்கும் பணியை நேற்று தொடங்கி வைத்தார்.

அந்தகால மரபுபடி,   நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) சமர்ப்பிப்பதற்கு முன்னர்  அல்வா எனும் இனிப்பு பொருள் தயாரித்து, பட்ஜெட் தயாரிப்பு பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு விநியோகம் செய்யப்படுவது வழக்கம்.

அந்த வழக்கத்தின்படியே நிதித்துறை அமைச்சகத்தின் தலைமை அலுவலகத்தில் மத்திய நிதித்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் முன்னிலையில் இன்று அல்வா தயாரிக்கப்பட்டு, அனைவருக்கும் பரிமாறப்பட்டது.

மத்திய நிதி மந்திரியாக பொறுப்பேற்ற பின்னர் தாக்கல் செய்யப்பட உள்ள முதல் பட்ஜெட் காரணமாக முதன்முறையாக நிர்மலா சீதாராமன் அல்வா கிண்டினார்.