சென்னை: விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரிப்பது கவலைக்குரியது என்று திமுக தலைவர் ஸ்டாலின் வருத்தம் தெரிவித்து உள்ளார்.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி விவசாயிகள் டெல்லியில் 44வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர இன்று 8வது கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

ஆனாலும் இந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது. இந் நிலையில், பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது குறித்து எதிர்க்கட்சி தலைவரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:

போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு இன்று  நிராகரிகரித்திருப்பது கவலைக்குரியது; அதேசமயம் மிகுந்த கண்டனத்திற்குரியது! நடைபெற்றுக் கொண்டிருக்கும் விவசாயிகள் போராட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவளிக்கப்படும் என்பதை தி.மு.க. சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். வேளாண்  சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசை மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.