டெல்லி: மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

டெல்லியில் உள்ள இதய மற்றும் நுரையீரல் மையத்தில் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன், முதல் கட்ட கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டார். அவருடன், அவரது மனைவியும் ஊசி போட்டு கொண்டார்.

முன்கள பணியாளர்களுக்கு கொரோனா ஊசி செலுத்தும் வகையில் கடந்த ஜனவரி 16ம் தேதி கொரோனா தடுப்பூசி இயக்கம் தொடங்கியது. 60 வயதுக்கு மேற்பட்ட பொது மக்களுக்கு ஊசி போடும பணி நாடு முழுவதும் நேற்று தொடங்கியது.

முதல் நாளில், பிரதமர் மோடி உள்ளிட்ட சில தலைவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். அதனை தொடர்ந்து, சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் இன்று தடுப்பூசி போட்டுக் கொண்டார். நாட்டில் ஒட்டுமொத்தமாக இதுவரை  1 கோடியே 48 லட்சத்து 54,136 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு உள்ளனர்.