கன்னியாகுமரி:
மிழகத்தில் ஒரு மிகப்பெரிய மாற்றம் வரவேண்டும் என்று தொண்டர்களிடம் அமித்ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கன்னியாகுமரியில் மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அமித்ஷா பிரசாரம் மேற்கொண்டார். இதற்காக திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நாகர்கோவில் மறவன்குடியிருப்பு ஆயுதப்படை மைதானத்திற்கு வந்தார். அங்கிருந்து கார் மூலம், சுசீந்திரம் வந்த அமித்ஷா, தாணுமாலயசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

இதன் பின்னர் அமித்ஷா கூறியதாவது: தமிழகத்தில் பா.ஜ.,- அ.தி.மு.க., கூட்டணியை பெருவாரியான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க வேண்டும். பொன். ராதாகிருஷ்ணனை கன்னியாகுமரி லோக்சபா தொகுதி மக்கள், பாரளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும். இந்த தேர்தல் மூலம் தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய மாற்றம் வரவேண்டும் என தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து நாகர்கோவில், ஹிந்து கல்லூரி அருகேயுள்ள நீலவிழி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த அவர், பொது மக்களிடம், பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக ஓட்டு சேகரித்தார். தொடர்ந்து, திறந்த வாகனத்தில் சென்று, பிரசாரம் மேற்கொண்டார்.