டெல்லி: மத்திய இணை அமைச்சர் கிரிஷன்பால் குர்ஜர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

நாடு முழுவதும் கொரோனா தொற்று அதி தீவிரமாக பரவி வருகிறது. அதிக தொற்றுகளுடன் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. வெகுஜன மக்களை மட்டுமல்லாது, அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட பலரையும் கொரோனா தாக்கி வருகிறது.

இந் நிலையில், மத்திய சமூக நீதித்துறை, அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் கிரிஷன் பால் குர்ஜர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார்.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது: நான் கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன். அதில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்கள் ஆலோசனைப்படி சிகிச்சை பெற்று வருகிறேன்.  கடந்த காலங்களில் என்னை தொடர்பு கொண்டவர்கள், கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள்  என தெரிவித்துள்ளார்.