சென்னை:  தமிழகஅரசு இன்று வெளியிட்டுள்ள அன்லாக்-4 அறிவிப்பில், தமிழகத்தில் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், மாநில அளவிலான தளர்வுகளுடான ஊரடங்கு செப்டம்பர் 30 வரை நீடித்து, மத்தியஅரசு அறிவித்து உள்ளது. அதைத் தொடர்ந்து, தமிழக அரசும், பொதுமுடக்கத்தை நீட்டித்திருப்பதுடன்,  பல்வேறு தளர்வுகளையும் அறிவித்து உள்ளது.

அதன்படி,  அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது  இதற்கென நிலையான வழிகாட்டு நடைமுறைகள் அரசால் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுஉள்ளது.

கோவிலுக்கு  தரிசனத்துக்கு வரும் அதிகபட்ச பக்தர்களின் எண்ணிக்கை நிர்ணயம் செய்வதுடன், வழிபாட்டு தலங்களில் உள்ளேயும் கர்ப்பகிரகம் போன்ற புனித இடத்திற்கும் ஒரே நேரத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுவர்.

அந்த வகையில் அனைத்து வழிபாட்டுத்தலங்களிலும் இரவு 8 மணி வரை பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறுஅதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.