வரதட்சணை கொடுமை தாங்க முடியாமல் நடிகர் உன்னி தேவின் மனைவி ப்ரியங்கா தற்கொலை செய்து கொண்டதாக அவரின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ப்ரியங்காவின் உடலில் கடித்த காயங்கள் இருந்ததாக தெரிவித்துள்ளனர்.

பிரபல மலையாள நடிகர் ராஜன் பி தேவின் மகன் உன்னி. கடந்த 2019ம் ஆண்டு ப்ரிங்யங்கா மணந்தார் உன்னி.

ப்ரியங்காவின் பெற்றோரிடம் அடிக்கடி பணம் கேட்டு வாங்கியிருக்கிறார் உன்னி. ஒரு கட்டத்தில் மனைவியை அடித்து வீட்டை விட்டு விரட்டிவிட்டார். தன் அம்மா வீட்டிற்கு வந்த ப்ரியங்கா, உன்னி தேவ் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் அளித்த மறுநாளே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் ப்ரியங்கா.

உன்னியை சும்மாவிடக் கூடாது என்று உறுதியாக இருந்தார். ஆனால் இதற்கிடையே ஒரு போன் கால் வந்தது. அதன் பிறகே ப்ரியங்கா தற்கொலை செய்து கொண்டார் என அவர் உறவினர் கூறியுள்ளார் .