புதுடெல்லி:

யார் பிரதமர் என்பதைவிட, பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதே முக்கிய குறிக்கோள் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.


தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம், தேர்தலுக்கு முன்பு அமைத்த எங்கள் கூட்டணி பெரும் வெற்றி பெறும்.
நிலையான ஆட்சி அமைக்க நாங்கள் ஒருமித்த நிலையை எட்டுவோம்.

யார் பிரதமர் ஆக வேண்டும் என்பது பெரிய விசயம் அல்ல. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதே முக்கிய குறிக்கோள் என்றார்.