டில்லி:

காவிரி மேலாண்மை ஆணையத்தின் இடைக்கால தலவராக மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங்  நியமிக்கப்பட்டிருப்பதாக தலைநகர வட்டார தகவல்கள் பரவி வருகின்றன.

ச்சநீதி மன்ற உத்தரவு படி, காவிரி மேலாண்மை ஆணையம் குறித்து இன்று மாலை  அரசிதழில் வெளியிடப்படும் என்று மத்திய நீர்வளத்துறை செயலாளர்  தெரிவித்திருந்தார். ஆனால், மேலாண்மை ஆணையத்தின் தலைவர் யார் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.

மேலும்,  காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு மாநிலங்கள் சார்பாக யாரை நியமிக்க வேண்டும் என்பது குறித்து  4 மாநில அரசுகளுக்கு கடிதம் அனுப்பப்படும் என்றும் தெரிவித்து உள்ளார்.

இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் இடைக்கால தலைவராக யு.பி.சிங் நியமனம் செய்யப்பட்டிருப்பதாக டில்லி வட்டார தகவல்கள் கூறுகின்றன.