டெல்லி: மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணி முதல்நிலை தேர்வு முடிவுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டு உள்ளது யுபிஎஸ்சி தெரிவித்து உள்ளது.
குடிமைப்பணி பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ஒவ்வொரு ஆண்டும் தேர்வை நடத்தி வருகிறது. முதல் நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வு என 3 கட்டங்களாக இந்த தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

நடப்பாண்டுக்கான குடிமைப்பணி தேர்வுக்கான அறிவிப்பு ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்பட்டது. மொத்தம் 796 காலிப்பணியிடங்களுக்கு  நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர்.
இதையடுத்து,  கடந்த மே மாதம் 31-ஆம் தேதி முதல் நிலைத் தேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால்,  கொரோனா நோய் பரவல் காரணமாக  தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மீண்டும் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டது. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும்  அக்டோபர் 4-ம் தேதி நாடு முழுவதும் தேர்வு நடைபெற்றது.  நாடு முழுவதும்  72 நகரங்களில் 2 ஆயிரத்து 569 மையங்களில் சுமார் 6.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த தேர்வை எழுதினார்கள்.
இந்த நிலையில், அக்டோபர் 4-ம் தேதி நடந்த குடிமைப்பணி முதல்நிலை தேர்வு முடிவுகளை யு.பி.எஸ்.சி. நிர்வாகம் தற்போடு ஆன்லைனில் வெளியிட்டுள்ளது.
முதன்மை தேர்வு ஜனவரி 8-ஆம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் முதல்முறையாக தேர்வு நடைபெற்று 19 நாட்களிலேயே முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தேர்வுமுடிவுகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்…
https://upsconline.nic.in/