டில்லி:

ந்திய குடிமைப்பணிகளுக்கான யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இதை நாடு முழுவதும் ஏராளமானோர் எழுதிய நிலையில், 759 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றள்ளனர். இந்த தேர்வில் மும்பை ஐஐடி மாணவரான  கனிஷ் கட்டாரி முதலிடத்தை பிடித்துள்ளார்.

தமிழகத்தில் இருந்து தேர்வு எழுதியவர்களில் 39 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர்.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.ஐ.எப்.எஸ். உள்ளிட்ட 26 வகையான இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வு கடந்த ஆண்டு ஜுன் மாதம் நடந்தது. மூன்று கட்டங்களாக நடைபெறும் தேர்வவை ஆயிரக்கணக் கான மாணவர்கள் எழுதிய இந்த தேர்வில், வெறும்  759 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 577 ஆண்கள் மற்றும் 182 பெண்கள்.

கனிஷாக் கட்டாரியா என்ற இளைஞர் முதல் இடம் பிடித்திருக்கிறார். இவர், ஐஐடி மும்பையில் பி.டெக் பட்டம் பெற்றுள்ளார். அக்‌ஷித்  ஜெயின் மற்றும் ஜுனைத் அகமத் ஆகியோர் அடுத்த அடுத்த இடங்களைப் பிடித்திருக்கின்றனர்.

தமிழகத்தில் இருந்து யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களின் விகிதம் கடந்த சில  ஆண்டு களாகக் குறைந்து வரும் நிலையில், இந்த ஆண்டு 39 மாணவர்கள் மட்டும்தான் தேர்வாகி யுள்ளனர். கடந்த பத்து ஆண்டை காட்டிலும் இந்தாண்டு மிகக் குறைந்த அளவில் தேர்ச்சி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் இருந்து 39 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  தமிழகத்தில் வசிக்கும் ரிஷப், அகில இந்திய அளவில் 23 வது இடமும் தமிழக அளவில் முதலிடமும் பெற்றுள்ளார் ரெஜினாமேரி 49-வது இடமும், தமிழக அளவில் 2-ம் இடமும் பெற்றுள்ளார்.

அபிசேக் அகில இந்திய அளவில் 79 இடமும் தமிழக அளவில் 3-வது இடமும் பிடித்துள்ளார்.  விரைவில், இவர்களுக்கான பயிற்சிகள் தொடங்க இருக்கிறது.

தேர்வான  39 பேரில் 30 பேர் சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்து வெற்றி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.