இஸ்லாமாபாத்,

மெரிக்கா மற்றும் இந்திய அரசால் தேடப்பட்டு வரும் மும்பை குண்டுவெடிப்பு பயங்கரவாதி யான ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் தங்கி உள்ளார். ஏற்கனவே கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டிருந்த அவர் சமீபத்தில் விடுதலை செய்யப்பட்டார்.

இதையடுத்து, இந்தியா மற்றும் அமெரிக்கா பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தது. டொனால்டு டிரம்ப் நேரடியாகவே எச்சரித்தார்.

இதைத்தொடர்ந்து, ஹபீஸ் சயித் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2008ம் ஆண்டு கடல் மார்க்கமாக  மும்பை வந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் நவம்பர் 26-ந்தேதி தேதி பயங்கரத் தாக்குதலை நடத்தினர். அந்த தாக்குதலில் 6 அமெரிக்கர் உள்பட 166 பேர் கொன்று குவிக்கப்பட்டனர்.

இந்த பயங்கரவாதச் செயலுக்கு மூளையாக செயல்பட்டது பாகிஸ்தானைச் சேர்ந்த ஹபீஸ் சயீத் என்று புலனாய்வுப் பிரிவு கண்டுபிடித்து அறிவித்தது.

தற்போது ஜமாத்-உத்-தவா என்ற அமைப்பை நடத்திவரும் ஹபீஸ் சயீத் தலைக்கு அமெரிக்கா ரூ.65 கோடி என்று விலை நிர்ணயித்துள்ளது. ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலிலும் ஹபீஸ் சயீத்தை சர்வதேச பயங்கரவாதி என்று அறிவிப்பு செய்துள்ளது. மேலும், அமெரிக்க வெளியுறவுத்துறையும் ஹபீஸ் சயீத்தை சர்வதேசப் பயங்கரவாதியாக அறிவித்துள்ளது.

அதைத்தொடர்ந்து  ஜமாத் உத் தாவா பயங்கரவாத அமைப்பின் தலைவன், ஹபீஸ் சயீத் மற்றும் அவன் கூட்டாளிகளை கைது செய்து வீட்டுக் காவலில் சிறை வைக்கப்பட்டனர். கடந்த 10 மாதமாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட சயித்தின் வீட்டு காவல் சமீபத்தில் விலக்கி கொள்ளப்பட்டது.

இதற்கு அமெரிக்கா, இந்தியா உள்பட பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஹபீஸ் சயீத் கைதுசெய்யப்படவில்லை என்றால் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் கடும் பாதிப்புகளை உருவாக்கும் என்று அமெரிக்கா எச்சரித்தது.

இந்நிலையில், , ‘தான் பயங்கரவாதி இல்லை. கறுப்புப் பட்டியலில் இருந்து தனது பெயரை நீக்க வேண்டும்’ என்று திடீரென்று ஹபீஸ் சயீத் சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இதன் காரணமாக கடுப்பான அமெரிக்கா நேரடியாக பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்து.

அதைத்தொடர்ந்து பயங்கரவாதி ஹபிஸ் சயித் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹபிஸ் சயித் தான் நடத்தி வரும் அமைப்பான  மில்லி முஸ்லிம் லீக் (எம்எம்எல்) ஐ அரசியல் கட்சியாக பதிவு செய்ய முயற்சித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.