1981ம் ஆண்டு துப்பாக்கிச்சூடு நடந்தபோது..
1981ம் ஆண்டு துப்பாக்கிச்சூடு நடந்தபோது..

முன்னாள் அமெரிக்க அதிபர் ரோனால்டு ரீகனை கொலை செய்ய முயற்சித்தவர்,  35 வருடங்களுக்கு பிறகு மனநல மருத்துவமனையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.
1981 ஆம் ஆண்டு அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில், ஹில்டன் ஹோட்டலுக்கு வெளியே  ரீகனை நோக்கி துப்பாக்கியால் சுட்டார் ஹின்க்லி ஜூனியர் என்கிற நபர்.  அதில் ரீகன் மற்றும் மூன்று பேர் காயமடைந்தனர்.
ஹின்க்லி ஜூனியர்
ஹின்க்லி ஜூனியர்

காயமடைந்தவர்களில் ஒருவரான அதிபரின் செய்தித் துறை செயலர் ஜேம்ஸ் பிராடி மூளையில் பலத்த காயம் ஏற்பட்டு 2014 ஆம் ஆண்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
துப்பாக்கிச்சூடு நடத்திய ஹின்க்லி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்ற அடிப்படையில் தண்டிக்கப்படாமல் மனநல மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தற்போது நீண்டநாள் மனநல சிகிச்சைக்குப் பிறகு, அவர் விடுதலை செய்யப்பட்டார்.