வாஷிங்டன்:
மெரிக்காவில் உலகின் இந்தியா உள்படப் பல நாடுகளுக்குச் செல்ல வேண்டாமென அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்றுநோயிலிருந்து பாதிக்கப்ப்டமால் இருக்க. உலகெங்கிலும் சுமார் 80% நாடுகளுக்குப் பயணம் செய்ய வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா 2வது அலை தீவிரமாகப் பரவி வருவதால், நாள் ஒன்றுக்குச் சராசரியாக 2.5 லட்சத்திற்கு மேல் பாதிப்பு பதிவாகி வருகிறது. அதேநேரத்தில் தினமும் 1700க்கும் மேற்பட்டோர் பலியாகி வருகின்றனர். கொரோனா தீவிரமாகப் பரவி வருவதால் இந்தியாவைச் சிவப்பு பட்டியலில் இணைத்துள்ளது இங்கிலாந்து. இந்நிலையில் இந்தியாவிற்கு யாரும் பயணம் செய்ய வேண்டாம் என அமெரிக்கா தனது நாட்டு மக்களுக்கு எச்சரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வேகமாகப் பரவி வருவதால் இந்தியா செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் இந்தியா சென்றால் கொரோனாவால் பாதிக்கப்படும் அபாயம் அதிகம் இருப்பதாகவும் அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு நோய்த் தடுப்பு கட்டுப்பாட்டு அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. தடுப்பூசி செலுத்திக்கொண்டிருந்தாலும் இந்தியாவிற்குச் செல்ல வேண்டாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியா செல்ல திட்டமிட்டிருந்த பல அமெரிக்கர்கள் தங்கள் பயணத்தை ரத்து செய்து வருகின்றனர். கொரோனா பாதிப்பில் உலகளவில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா 2வது இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.