பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத், சுவாசக்கோளாறு காரணமாக மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் கடந்த 8 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
இரண்டு நாட்களில் அவர் டிஸ்சார்ஜ் ஆனார்..


சஞ்சய் தத்துக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பதாக பரிசோதனையில் தெரிய வந்ததால், சிகிச்சைக்காக அவர் அமெரிக்கா செல்ல விருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதனை உறுதி செய்யும் விதமாக ‘’மருத்துவ காரணங்களால், வேலைக்கு கொஞ்சகாலம் ஓய்வு கொடுக்கிறேன்’’ என அவரும் ட்விடட்ரில் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில் சஞ்சய் தத் மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனை உறுதி படுத்தியுள்ள சஞ்சய் தத் மனைவி மானாயாதா’’ சஞ்சய் தத்துக்கு ஆரம்பக்கட்ட சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. திறமையான டாக்டர்கள் கையில் அவரை ஒப்படைத்துளோம். கொரோனா பரவலின் தாக்கத்தை பொறுத்தே அவரை வெளிநாடு கொண்டு செல்வது குறித்து முடிவு செய்யப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.
சஞ்சய் தத்துக்கு என்ன நோய் என்பதை சொல்ல அவர் மறுத்து விட்டார்.
‘’ டாக்டர்கள் தங்கள் கடமையை செய்து வருகிறார்கள். சஞ்சய் தத், நோயின் இந்த நிலையில் உள்ளார்.. அந்த நிலையில் உள்ளார் என்றெல்லாம் தயவு செய்து வதந்தி பரப்ப வேண்டாம் என இரு கரம் கூப்பி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.’’ என்று மானயதா உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

-பா.பாரதி.