புளோரிடா,
மெரிக்காவை தாக்கிய மேத்யூ புகலால் இதுவரை 339 பேர் இறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இதையொட்டி புளோரிடா மாகாணத்தில்  அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
சுரீபியன் கடலில் உருவான புயலுக்கு ‘மேத்யூ’  என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த  புயல் பகாமஸ் நாடு வழியாக அட்லாண்டிக் கடலுக்குள் புகுந்து  அமெரிக்காவை  கடந்தது.
இந்த புயலினார்  அமரிக்கா, ஹெய்தி, கியூபா, பகாமாஸ்  நாடுகளில் கடுமையா ன காற்றுடன் மழை கொட்டியது.
மேத்யூ புகலின் கோர தாக்குதலில்  அமெரிக்காவும், ஹெய்தியும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் புளோரிடா, ஜார்ஜியா, வடக்கு மற்றும் தெற்கு கரோலினா மாகாணங்களில் மணிக்கு 140 கி.மீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசியது.
mathew
இதனால், பலத்த மழை கொட்டியது. ரோடுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஏராளமான ரோடுகள் துண்டிக்கப்பட்டன. மின்சாரம், தொலைதொடர்பு துண்டிக்கப்பட்டது.
கியாஸ் நிறுவனங்கள், மற்றும் உணவுப் பொருட்கள் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டன. பேய்க்காற்று வீசுவதலும், அதிகமாக மழை பெய்வதாலும் வாகனங்கள் செல்ல முடியாமல் ஆங்காங்கே ரோட்டோரம் நிறுத்தப்பட்டு உள்ளன.
இதன் காரணமாக  உணவு பொருட்கள் சப்ளை இல்லை. மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் .புளோரிடா மாவட்டம் இந்த புயலால் கடுமையான பாதிப்புக்கு உள்ளானது. ஏற்கனவே அங்குள்ள 15 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இங்கு 60 பாதுகாப்பு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
மீட்பு மற்றும் அவசர கால குழுக்கள் இங்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக புளோரிடாவில் அவசர நிலையை பிரகடனத்தை அதிபர் அறிவித்து உள்ளார்.
மேலும் ஜார்ஷியா, மற்றும் தெற்கு கரோலினாவிலும் 3 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
புயல் பாதித்த பகுதிகளில் பள்ளிகள் மற்றும் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. ஆஸ்பத்திரிகளில் இருந்து நோயாளிகளும் வெளியேற்றப்பட்டு அவை மூடப்பட்டன.புளோரிடாவில் உள்ள மியாமி, போர்ட்லவுடர்யில் மற்றும் ஒர்லண்டோ உள்ளிட்ட நகரங்களுக்கு நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.அமெரிக்காவில் தாக்கிய ‘மேத்யூ’ புயலுக்கு இதுவரை 339 பேர் பலியாகி உள்ளனர். 500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் வீடுகள் இடிந்தும், மரங்கள் முறிந்து விழுந்ததில் சிக்கியவர்கள் ஆவர்
‘மேத்யூ’ புயல் தாக்குதலில் கெய்தி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஏராளமான மரங்கள் வேருடன் பிடுங்கி தூக்கி வீசப்பட்டன. இங்கு புயல் மழைக்கு 136 பேர் உயிரிழந்தனர்.
பகாமாஸ் நாட்டில் தலைநகர் நஸ்காயு நகரில் மணிக்கு 40 கி.மீட்டர் வேகத்தில் புயல் தாக்கியது.
ஏராளமான பேரீச்சை உள்ளிட்ட மரங்கள் வேருடன் பிடுங்கி காற்றில் அடித்து வரப்பட்டு வீடுகள் மீது விழுந்தது. இதனால் வீடுகள் நொறுங்கி சேதம்அடைந்தன.