https://www.instagram.com/p/B9qHZ7SAV9u/

சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று தற்போது 110 நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த கொரோனா தொற்றுக்கு இதுவரை 4200 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 24,000 பேருக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

இந்தியாவில் 81 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை மத்திய சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது. இதில் 64 இந்திய குடிமக்கள் மற்றும் 17 வெளிநாட்டினர் அடங்குவார்கள். 17 வெளிநாட்டினர்களில் 16 பேர் இத்தாலியர்கள் மற்றும் 1 கனடா நாட்டை சேர்ந்தவர்.

இந்நிலையில் பழம்பெரும் மலையாள நடிகை ஊர்மிளாவின் மகள் நடிகை உத்ரா உன்னியின் திருமண கொண்டாட்டம் கொரோனா வைரஸ் தாக்கத்தால் தள்ளிப் போயுள்ளது.

“உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்தச் சூழல் சரியாகும் வரை எங்களது திருமண கொண்டாத்தை தள்ளி வைத்திருக்கிறோம்.

எங்களது திருமணத்தில் கலந்து கொள்வதற்காக ஏற்கெனவே நீங்கள் டிக்கெட் முன்பதிவு செய்து வைத்திருப்பீர்கள். இருந்தாலும் இதை சொல்வதற்கு வருந்துகிறோம். குறிப்பிட்ட தினத்தில் எங்களது தாலி கட்டும் நிகழ்ச்சி கோவிலில் வைத்து நடைபெறும். வரும் நாட்களில் இதைப் பற்றி தெரிவிக்கிறோம். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். உலகம் கொரோனாவிலிருந்து விரைந்து மீண்டு வரட்டும்” என்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை உத்ரா உன்னி.

தமிழில் ‘வவ்வால் பசங்க’ படத்தில் நடித்தவர் நடிகை உத்ரா என்பது குறிப்பிடத்தக்கது.