லக்னோ: உத்தர பிரதேச மாநில அமைச்சர் சதீஷ் மகானாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. எம்பிக்கள், எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் என அரசியல் பிரமுகர்களும் கொரோனா தொற்று ஆளாகி வருகின்றனர்.

இந் நிலையில், உத்தரபிரதேச மாநில உள்கட்டமைப்பு மற்றும் தொழில்துறை மேம்பாட்டு அமைச்சர் சதீஷ் மகானாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

தற்போது அமைச்சர் மகானா வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவருடன் தொடர்பிலிருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொண்டு தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு தமது டுவிட்டர் பக்கத்தில் கூறி உள்ளார்.