ஆர்.எஸ்.இன்ஃபோடையின்மண்ட் நிறுவனம் தயாரிப்பில் , வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள படம் ‘வாடிவாசல்’.

‘அசுரன்’ படத்தைத் தயாரித்த தாணு, சூர்யா – வெற்றிமாறன் கூட்டணியில் இந்த படத்தை தயாரிக்கவுள்ளார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தப் படத்தில் நடிகர் சூர்யா தந்தை – மகன் என இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது.வாடிவாசல் என்ற குறுநாவலை எழுத்தாளர் சி.சு.செல்லப்பா எழுதி 1959-ம் ஆண்டு வெளியானது.

சில மாதங்களுக்கு முன்பாக, சி.சு.செல்லப்பா எழுதிய ‘வாடிவாசல்’ நாவல் உரிமையை வெற்றிமாறன் கைப்பற்றியிருந்தார். அதனைத் தான் சூர்யாவை வைத்து படமாக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா ஊரடங்கால் அணைத்து படப்பிடிப்புகளும் முடங்கி கிடந்தது .

இந்தப் படத்தின் ஷூட்டிங் ஜூலை மாதம் தொடங்க இருக்கிறது. அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் வாடிவாசல் படத்துக்கான இசைப்பணிகள் தொடங்கியிருப்பதாக அந்தப் படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். புதிதாக கிடைத்திருக்கும் இந்த அப்டேட்டால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.