1980-களில் நடந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்படும் படம் ‘பெல்பாட்டம்’. ரஞ்சித் எம் திவாரி இயக்கும் இந்தப் படத்தில் அக்ஷய்குமார் நாயகனாக நடிக்கிறார்.
அக்‌ஷய் குமார் நாயகனாக நடிக்கவுள்ள இந்தப் படத்தில் நாயகியாக வாணி கபூர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அக்‌ஷய் குமாருடன் வாணி கபூர் நடிக்கும் முதல் படமாக இது அமைந்துள்ளது.
இந்த வருடத்தின் கடைசியில் படப்பிடிப்புடன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் 2, 2021 அன்று ‘பெல்பாட்டம்’ வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.