சென்னை

டிகர் வடிவேலுவின் மகளுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன.

நகைச்சுவை நடிகர் வடிவேலுவுக்கு எக்கச்சகமான ரசிகர்கள் உள்ளனர்.  அவர் கதாநாயகனாக நடித்த படங்களிலும் அவருக்கு நகைச்சுவை கலந்த வேடங்களே அளிக்கப்பட்டன.    இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, தெனாலி, எலி உள்ளிட்ட படஙக்ளில் அவர் கதாநாயகனாக நடித்து புகழ் பெற்றார்.

பிறகு அரசியலில் இறங்கியதால் வாய்ப்பு இழந்து நடிக்காமல் இருந்த வடிவேலு மீண்டும் சில படங்களில் நடிக்கத் தொடங்கினார்.   சமீபத்தில் அவர் நடிக்க இருந்த 24ஆம் புலிகேசி படத்தில் இருந்து அவர் விலகியது கடும் பிரச்னையை உண்டாக்கி உள்ளது.   அவர் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

வடிவேலு சில வருடங்களுக்கு முன்பு தனது மகளின் திருமணத்தை மிகவும் எளிமையாக நடத்தினார்.   தற்போது வடிவேலுவின் மகளுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளது,  ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைக்கு வடிவேலு தாத்தா ஆகி உள்ளார்.  இதை ஒட்டி தனது நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் சொந்த ஊரில் வடிவேலு விருந்து அளித்துள்ளார்.