சுந்தர்.சி மற்றும் வடிவேலு கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றது. அவர்கள் தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான தான் இணைய உள்ளனர் என கூறப்படுகிறது.

தற்போது கொரோனா வைரஸ் காரணமாக எந்த திரைப்பட தயாரிப்பு மற்றும் ஷூட்டிங் பணிகளும் நடைபெறாததால் தலைநகரம் 2 படத்திற்கான கதையை இயக்குனர் தயார் செய்துவிட்டார்.

சுந்தர்.சி நடித்த இருட்டு என்ற பேய் படத்தினை இயக்கி இருந்த வி. இசட். துரை தான் இந்த படத்தை இயக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

இருப்பினும் இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை.