நண்பேன்டா வாட்ஸ்அப் குழுவின் நண்பர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட வடிவேலு தெம்பு இருக்கு, நடிக்க ஆசை இருக்கு, ஆனால் யாரும் வாய்ப்பு தருவது இல்லை, இது பெரிய கொடுமை என்று அந்த நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

மேலும் உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடலை பாடிய அவர் வஞ்சத்தில் வீழ்ந்தேனடா என்று பாடி கண் கலங்கிவிட்டார்.

நம்மை எல்லாம் சிரிக்க வைத்துக் கொண்டிருக்கும் வடிவேலுவுக்கு இப்படி ஒரு நிலைமையா என அனைவரும் வருத்தப்பட்டனர் .

இந்நிலையில் மெட்டி ஒலி சீரியல் புகழ் திருமுருகன் தற்போது ஒரு படத்தை இயக்குகிறார். சத்யஜோதி தியாகராஜன் தயாரிக்கும் அந்த படத்தில் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறாராம். வடிவேலு மட்டும் அல்ல ஆர்.ஜே. பாலாஜியும் நடிக்கிறாராம்.

மெட்டி ஒலி சீரியல் புகழ் திருமுருகன் இயக்கிய எம் மகன் படத்தை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள். அந்த படத்தில் பரத்தின் தாய் மாமனாக வடிவேலு அசத்தியிருப்பார்.