சென்னை:

திமுக தலைவர் கருணாநிதியை மதிமுக பொதுச்செயலர் இன்று இரவு சந்தித்தார். முதுமை காரணமாக கருணாநிதி ஓய்வில் இருந்து வருகிறார். அவருக்கு செயற்கை உணவு குழாய் பொருத்தப்பட்டு உள்ளது

இந்த செயற்கை உணவு குழாய் 6 மாதங்களுக்கு ஒருமுறை மாற்றப்பட வேண்டும். கடந்த சில நாட்களுக்கு முன்னர் காவேரி மருத்துவமனையில் கருணாநிதிக்கு இந்த செயற்கை உணவு குழாய் மாற்றப்பட்டது.

இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கருணாநிதியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது, கருணாநிதி தம்மை அடையாளம் கண்டு கொண்டதாகவும் பேச முயற்சித்தார் எனவும் நெகிழ்ச்சியுடன் திருமாவளவன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் மதிமுக பொதுச்செயலர் வைகோ இன்று இரவு கோபாலபுரம் இல்லம் சென்றார். அவரை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வரவேற்றார். பிறகு கருணாநிதியை சந்தித்து வைகோ நலம் விசாரித்தார்.

அவருடன் மல்லை சத்யா, மதிமுக அவைத்தலைவர் துரைசாமி உள்ளிட்ட மதிமுக பிரமுகர்கள் வந்திருந்தார்கள். இந்த சந்திப்பு தமிழக அரசியலில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.