சென்னை:

தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று சந்தித்தார்.

மகாராஷ்டிரா மாநில ஆளுநரான இவர் தமிழகத்தையும் கூடுதலாக கவனித்து வந்தார். தற்போது தமிழகத்திற்கு புதிய ஆளுநர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் விரைவில் பொறுப்பேற்கவுள்ளார்.

இந்நிலையில் தனது நீண்ட நாள் நண்பரான வித்யாசாகர் ராவ் தமிழக ஆளுநர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, மராட்டிய மாநிலம் செல்வதால், நட்பு ரீதியாக வைகோ நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

‘‘வித்யாசாகர் ராவ் நடுநிலை தவறாமல் நேர்மையாக பணியாற்றினார். ஆளுநர் மாளிகையில் திருவள்ளுவர் மற்றும் அவ்வையார் சிலைகளை நிறுவிய பெருமைக்குரியவர். பொதுமக்கள் ஆளுநர் மாளிகையை கண்டு களிப்பதற்கு அனுமதித்ததற்கான சிறப்பும் அவருக்கு உண்டு’’ என வைகோ கூறினார்.