சென்னை :

ர்.கே.நகரில் இன்று நடைபெற்ற தி.மு.க. கூட்டத்தில் கலந்துகொண்ட வைகோ, ஸ்டாலின் வேட்டியில் பட்ட கறையை பாசத்துடன் துடைத்துவிட்டதை தி.மு.க.வினர் நெகிழ்ச்சியுடன் பார்த்தனர்.

ஆர்.கே. நகர் தொகுதியில் இன்று தி.மு.க. பிரச்சாரக் கூட்டம் நடந்தது. இதில் அக்கட்சியின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பேசிய வைகோ, “முக ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வர் ஆவார்” என்று ஆவேசத்துடன் பேசினார். (பேச்சு விவரம் தனி செய்தியாக)

இதற்கிடையே   மேடையில் அமர்ந்திருந்த மு.க. ஸ்டாலினின் வேட்டியில் ஏதோ கறை பட்டுவிட்டது. இதை அருகிலிருந்த வைகோ கவனித்துச் சொன்னார். மேலும், தண்ணீர் கொண்டு வரச் சொல்லி அந்த கறையை பாசத்துடன் துடைத்துவிட்டார். இந்தக் காட்சியை தி.மு.கவினர் நெகிழ்ச்சியுடன் பார்த்தனர்.