திருச்சி: 

வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் வரும் 6ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.

பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் முதன்மையான விழாவான வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு வரும் 6ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி திருச்சி மாவட்டத்துக்கு விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து  திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு விடுத்துள்ள அறிக்கையில், ‘வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் 6ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்றும், அதேசமயம் ஏற்கனவே தேர்வு நடைபெறும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரையாண்டு முடிந்து வரும் 6ந்தேதி (திங்கட்கிழமை) பள்ளிகள் தொடங்கப்படும் நிலையில், திருச்சி மாவட்டத்துக்கு அன்றைய தினம் விடுமுறை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.