ளத்தூர் கண்ணம்மா படத்தில் சிறுவனாக நடிக்கத் தொடங்கிய கமல்ஹாசன் இன்றைக்கு திரையுலகில் 61 வருடங்கள் பயணத்தை தங்கு தடையின்றி தொடர்ந்துக் கொண்டிருக்கிறார். இயக் குனர் கே,பாலசந்தரின் கையில் சேர்ந்து புடம்போட்ட தங்ககமாக மாறி திரையில் நடிகர் திலகம் வழியில் ஒளிவிசத் தொடங்கி அந்த ஒளிவிளக்கை அணைய விடாமல் ஒலிம்பிக் ஜோதியாக இன்று வரை கையில் ஏந்தி ஓடிக்கொண்டிருக் கிறார் கமல்.
நடிப்பு, நடனம், பாடல் இயக்கம் என சினிமாவில்இன்னும் எண்ணற்ற துறை களில் தன்னை ஈடுபட்டு தன்னை தசாவதாராமாக்கி இன்று உலகநாயனாக உயர்ந்து நிற்கிறார் கமல். மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவராக அரசியல் பணியும் செய்து வருகிறார்.


கமலின் 61 வருட பயணத்தை கவிதையாக்கி தந்திருக்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து.
அவர் கவிதை சிறுசுதான் ஆனால் பட்டி மன்ற விவாதம் வைக்கும் அளவுக்கு விஷயம் பெருசு. வைரமுத்து கூறியிருப் பதாவது:
பரமக்குடியின் அருமைக் கலைஞன். பிறப்பு சிவப்பு; இருப்பு கறுப்பு. மரபுகடந்த புதுக்கவிதை புரிதல் கடிது; புரிந்தால் இனிது. ஆண்டுகள் அறுபது காய்த்த பின்னும் நனிகனி குலுங்கும் தனிவிருட்சம். கலைத்தாய் தன் நெற்றியில் மாற்றி மாற்றிச் சூடுவது திலகத்தையும் இவர் பெயரையும் ‘கலையாக் கலையே கமல்’
இவ்வாறு வைரமுத்து தெரிவித்திருக் கிறார்.
61 என்றால் என்ன? இன்னும் இருபத் தொன்றாக கமல்ஹாசன் தனது நடிப்பு பயணத்தை தொடர்ந்துக் கொண்டி ருக்கிறார். அடுத்து இந்தியன் 2, தலைவன் இருக்கிறான் படங்களில் நடிக்கிறார். இந்த பயணம் வாழ்நாள் முழுவதும் தொடரும்.