தேவையானவை:

வல்லாரைக்கீரை – அரை கட்டு

தக்காளி   – 1

வெங்காயம் – 1

இஞ்சி – சிறிய துண்டு

தேங்காய் துருவல்  – கால் கப்

பச்சை மிளகாய் – 5

கடு, உளுத்தம்பருப்பு – தலா கால் டீஸ்பூன்

பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை

எண்ணெய் – 2 டீஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை: 

வாணலியில் எண்ணெய் விட்டு வல்லாரைக்கீரை, நறுக்கிய தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, தேங்காய் துருவல் ஆகியவற்றை போட்டு வதக்கவும். வதங்கியபின் ஆறவிட்டு உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும். மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் தாளித்து, அரைத்த விழுதில் சேர்க்கவும். இப்போது சுவையான வல்லாரை சட்னி ரெடி…!

குறிப்பு:வல்லாரைக் கீரை மூளையை சுறுசுறுப்பாக்கும். நினைவாற்றலை பெருக்கும். வல்லாரைக் கீரையில் புளி சேர்க்கக்கூடாது.  அப்படி சேர்த்தால் அதிலிருக்கும் சத்துக்கள் குறைந்து விடும்.