மாணிக்கம் படத்தில் நடித்தவர் வனிதா. இவர் இரண்டு முறை திருமணம் ஆகி கருத்து வேறுபாடு காரணமாக விவா கரத்து பெற்று பிரிந்தார். சமீபத்தில் பீட்டர் பால் என்பவரை 3வது திருமணம் செய்து கொண்டார். இதுபற்றி விமர்சனங்கள் எழுந்தன.
நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட சில நடிகைகள் வனிதா திருமணத்தை விமர் சித்தபோது அவர் களுக்கு பதில் தந்தார். இதையடுத்து அவர்கள் இப்பிரச்னை யிலிருந்து விலகிக்கொண்ட னர். இந்நிலையில் சூரியா தேவி என்பவர் வனிதாவை யூடியூபில் கடுமையாக வமிர்சித்தார். அதைக்கண்டு கோபம் அடைந்த வனிதா அப்பெண் மீது போலீஸில் புகார் கொடுத் தார்.

சூரியா தேவி போதை பொருள் விற்பவர் அவர் தனது செயலை மறைக்க என்னை திட்டுகிறார். என்னைப்பற்றி அவதூறாக பேசி எனது இமைஜை கெடுக் கிறார் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனிதா புகாரில் கூறியி ருந்தார்.
இதையடுத்து வனிதா மீது வடபழனி போலீசில் சூரியா தேவி புகார் அளித்தார். தன் மீது அவதூறாக போதை பொருள் விற்பதாக கூறும் வனிதா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் வடபழனி போலீஸார் இருவரையும் அழைத்து சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். சுமார் 3 மணி நேரம் பேச்சு வார்த்தை நடந்தது. ஆனால் சமரசம் ஏற்படவில்லை என்று தெரிகிறது
’சமாதானமாகபோக எண்ணியே நான் பேச்சுவார்த்தைக்கு வந்தேன் ஆனால் அப்பெண் அதற்கு தயாராக இல்லை என வனிதா தெரிவித்தார்.
முன்னதாக பீட்டர் பாலின் முதல் மனைவி தன்னிடம் சட்டப்படி விவாகரத்து பெறாமல் எனது கணவர் பீட்டர் பால் வனிதாவை திருமணம் செய்திருக்கிறார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.