னிதா டிவி டெக்னீஷியன் பீட்டர் பால் என்பவரை 3வதாக திருமணம் செய்தார். இது சர்ச்சையாகி உள்ளது போலீஸ் நிலையம் வரை புகார் சென்றிருக்கிறது.
வனிதா திருமணம் பற்றி லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி விமர்சனம் செய்ததால் அவர்களுக்குள் மோதல் நிகழ்ந்தது. லட்சுமி ராமகிருஷ்ணனை ஒருமையில் பேசி விரட்டினார் வனிதா.

இந்தநிலையில் நேற்று மாலை திடீரென்று வனிதா டிவிட்டரிலிருந்து வெளியேறினார். நடிகை நயன்தாரா, பிரபுதேவா தொடர்பில் இருந்தனர், கமல்ஹாசன் சில நடிகைகளுடன் தொடர்பில் இருந்தார். அவர்களை பற்றி பேச தைரியமில்லாதவர்கள் என்னை விமர்சிக்கிறார்கள் என வனிதா டிவிட்டரில் கூறியிருந்தார். இது நயன்தாரா ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது. நயன்தாராவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஹேஷ் டேக் உருவாக்கிய ரசிகர்கள் வனிதாவை சரமாரியாக தாக்கி மெசேஜ் வெளி யிடத்தொடங்கினார். அதனாலேயே டிவிட்டரிலிருந்து வனிதா வெளியேறி யதாக தெரிகிறது.