பிரபல நடிகையும் பிக் பாஸ் நட்சத்திரமான வனிதா விஜயகுமார் பீட்டர் பாலுடனான திருமணம் பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. பீட்டரின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் தான் இன்னும் விவாகரத்து கொடுக்கவில்லை என்றும் தனது இரண்டு குழந்தைகளுக்காக தனது கணவரை திரும்பப் பெற விரும்புகிறார் என்றும் போலீஸ் புகார் அளித்துள்ளார்.

பல திரைப்பட பிரபலங்கள் இதை பற்றி வனிதாவுக்கு அறிவுறுத்தினர், ஆனால் அவர் தனது சொந்த வாழ்க்கையையும் அவருடன் வசிக்கும் அவரது இரண்டு மகள்களையும் கவனித்துக் கொள்ளும் திறன் இருப்பதாக தைரியமாக பதிலளித்துள்ளார்.
வனிதாவின் முதல் கணவர் நடிகர் ஆகாஷ் மற்றும் அவரது 23 வயது மகன் விஜய் ஸ்ரீஹரியும் இந்த விவகாரங்களில் ஊடகங்களின் பார்வை மனவேதனை அளிக்கிறது என தெரிவித்துள்ளனர் .

விஜய் ஸ்ரீஹாரி 2000 ஆம் ஆண்டில் வனிதா மற்றும் ஆகாஷின் முதல் குழந்தை யாக பிறந்தவர். ​​2007 ஆம் ஆண்டில் விவாகரத்தின்போது அவர் தந்தையுடன் தங்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது, அதே நேரத்தில் மகள் ஜெயனிதா தாயுடன் இருப்பதாக கூறப்பட்டது .
வனிதா-பீட்டர் பால் பிரச்சினைகள் குறித்து மக்கள் தனது கருத்தை அவரிடம் கேட்க முற்படுவதால், விஜய் ஸ்ரீ ஹரி சமூக ஊடகங்கள் உட்பட வெளி உலகத்திலிருந்து தன்னை முற்றிலுமாக முடக்கி விட்டதாக ஆகாஷ் ஊடகங்களுக்கு தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஒவ்வொரு முறையும் வனிதா சம்பந்தப்பட்ட ஒரு சர்ச்சை ஏற்படும் போது, ​​அவரும் தனது மகனும் மன அழுத்தத்திற்கு ஆளாவதாக கூறியுள்ளார் .

2000 களில் பிரபலமான தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகராக இருந்த ஆகாஷ், எந்தவொரு ஊடக கவனத்திலும் சிக்கிக் கொள்ள விரும்பாததால், ரியல் எஸ்டேட் வணிகத்தில் கவனம் செலுத்துவதற்காக தன்னை மீடியாக்களிடம் விலகிக்கொண்டார் .